Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Wednesday, April 29, 2009

வாழ்க்கை வாழ்வதற்கே - படக்கதை

(பழைய மின்னஞ்சல் தமிழாக்கம். ஏற்கனவே பார்த்தவர்கள் பொறுத்தருள்க!)

தற்கொலை முடிவெடுத்து 11-வது மாடியிலிருந்து கீழே குதித்த மேரி தரையை நோக்கித் தன் இறுதிப்பயணத்தை ஆரம்பித்தாள்.....













10-வது
மாடி...






அந்த புதுமணத் தம்பதியர் சண்டையில் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டிருந்தனர்.







9-வது மாடி...






உறுதியான மனம் படைத்த பீட்டர் அழுதுகொண்டிருந்தான்.








7-வது மாடி...




டேன் தன் வழமைபோல் மன அழுத்தத்துக்கான மருந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.










6-வது மாடி...





இன்னும் வேலைகிடைக்காத ஹெங் தான் வாங்கிவந்த செய்தித்தாள்களில் வேலைவாய்ப்பு விளம்பரங்களைத் தேடிக்கொண்டிருந்தான்.








4-வது மாடி...





ரோசி தன் ஆண் நண்பருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கத்திக் கொண்டிருந்தாள்.







3-வது மாடி...



அந்த தாத்தா இன்றாவது யாரும் தன்னைச் சந்திக்க வருவார்களா என்று சன்னலில் பார்த்துக்கொண்டிருந்தார்.








2-வது மாடி.....




லில்லி ஆறுமாத்திற்குமுன் விபத்தில் இறந்த தன் கணவனின் புகைப்படைத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.








முதல்மாடி...


'நான் தான் இந்த உலகிலேயே துரதிர்ஷ்டசாலி என நினைத்திருந்தேன்'










'ஆனா, எல்லோருக்குமே அவரவர் பிரச்சனைகளும், கவலைகளும் இருக்கத்தானே செய்கிறது'










'இவர்களை விட நான் ஒன்றும் அவ்வளவு துயரத்தில் இல்லையே'






























'இப்போது அவர்கள் எல்லாரும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்'













'ம்... எப்படியோ! என்னைப்பார்த்த பிறகு, அவர்கள் துயரம் ஒன்றும் அவ்வளவு பெரிதில்லை எனக் கண்டிப்பாக நினைத்துக்கொள்வார்கள் !'



Friday, April 24, 2009

உனக்கென்ன மேலே நின்றாய் !

புதிதாக மேலுலகம் வந்துசேர்ந்த மூன்று ஆன்மாக்களின் முன் கடவுள் தோன்றினார். பின் அவைகளைப் பார்த்து, 'சொர்க்கத்தில் ஒருவருக்குத்தான் இடமுண்டு. மற்றவர்கள் நரகத்திற்குச் செல்லவேண்டும். உங்களில் யார் ஒருவர் சொர்க்கம் செல்வதென்று நீங்களே முடிவு செய்யுங்கள்' என்றார்.

முதல் ஆன்மா, 'நான் ஒரு சாமியார். நிதமும் கடவுளையே நினைத்துப்போற்றி வழிபட்டு வாழ்ந்து வந்தேன். எனவே, எனக்குத்தான் சொர்க்கத்திற்குச் செல்லும் முழுத்தகுதியும் உண்டு' என்றது.

இரண்டாம் ஆன்மாவோ, 'நான் ஒரு மருத்துவர். உடல்நலம் குன்றி அவதிப்படுவோரின் துயர்துடைப்பதையே வாழ்நாளின் குறிக்கோளாகக்கொண்டு, நிறைய உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறேன். எனவே, என்னை சொர்க்கத்திற்கு அனுப்புங்கள்' என்று வாதிட்டது.

கடவுள் மூன்றாம் ஆன்மாவை ஏறிட, அது 'நான் ஒர் ஈழத்தமிழன்' எனக்கூறி அமைதியானது. உடனே, மற்ற இரு ஆன்மாக்களும், 'கடவுளே! சொர்க்கத்தில் இருக்கும் அந்த இடம் எங்களுக்கு வேண்டாம். இந்த ஆன்மாவிற்கே கொடுத்துவிடுங்கள். ஏனெனில், அது பூமியிலேயே நரகவாழ்க்கையை வாழ்ந்துவிட்டது' என்றன.

கடவுளும் தெரிந்துகொண்டார் :^(

(கேட்ட கதைதான். இன்று மனதில் இப்படித் தோன்றியது)


Pages

Flickr