Showing posts with label மின்னஞ்சல். Show all posts
Showing posts with label மின்னஞ்சல். Show all posts

Wednesday, April 29, 2009

வாழ்க்கை வாழ்வதற்கே - படக்கதை

(பழைய மின்னஞ்சல் தமிழாக்கம். ஏற்கனவே பார்த்தவர்கள் பொறுத்தருள்க!)

தற்கொலை முடிவெடுத்து 11-வது மாடியிலிருந்து கீழே குதித்த மேரி தரையை நோக்கித் தன் இறுதிப்பயணத்தை ஆரம்பித்தாள்.....













10-வது
மாடி...






அந்த புதுமணத் தம்பதியர் சண்டையில் ஒருவரையொருவர் அடித்துக்கொண்டிருந்தனர்.







9-வது மாடி...






உறுதியான மனம் படைத்த பீட்டர் அழுதுகொண்டிருந்தான்.








7-வது மாடி...




டேன் தன் வழமைபோல் மன அழுத்தத்துக்கான மருந்தை சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.










6-வது மாடி...





இன்னும் வேலைகிடைக்காத ஹெங் தான் வாங்கிவந்த செய்தித்தாள்களில் வேலைவாய்ப்பு விளம்பரங்களைத் தேடிக்கொண்டிருந்தான்.








4-வது மாடி...





ரோசி தன் ஆண் நண்பருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கத்திக் கொண்டிருந்தாள்.







3-வது மாடி...



அந்த தாத்தா இன்றாவது யாரும் தன்னைச் சந்திக்க வருவார்களா என்று சன்னலில் பார்த்துக்கொண்டிருந்தார்.








2-வது மாடி.....




லில்லி ஆறுமாத்திற்குமுன் விபத்தில் இறந்த தன் கணவனின் புகைப்படைத்தையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.








முதல்மாடி...


'நான் தான் இந்த உலகிலேயே துரதிர்ஷ்டசாலி என நினைத்திருந்தேன்'










'ஆனா, எல்லோருக்குமே அவரவர் பிரச்சனைகளும், கவலைகளும் இருக்கத்தானே செய்கிறது'










'இவர்களை விட நான் ஒன்றும் அவ்வளவு துயரத்தில் இல்லையே'






























'இப்போது அவர்கள் எல்லாரும் என்னைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்'













'ம்... எப்படியோ! என்னைப்பார்த்த பிறகு, அவர்கள் துயரம் ஒன்றும் அவ்வளவு பெரிதில்லை எனக் கண்டிப்பாக நினைத்துக்கொள்வார்கள் !'



Saturday, April 11, 2009

மனிதவாழ்க்கை - குட்டிக்கதை

மின்னஞ்சலில் வந்த கதையின் தமிழாக்கம்.

கடவுள் கழுதையைப் படைத்து, 'நீ கழுதை. காலைமுதல் மாலைவரை பொதிசுமைப்பாய். 50 வருடங்கள் உயிர் வாழ்வாய்' என்று அதனிடம் கூறினார். கழுதையோ தனக்கு 20 வருடங்கள் போதுமென வரம் வாங்கிக்கொண்டது.

கடவுள் நாயைப்படைத்து அதனிடம் சொன்னார், 'நீ ஒரு நாய். மனிதர்களின் நல்ல நண்பனாய் இருந்து அவன் வீட்டைக் காப்பாய். அவன் கொடுப்பதை உண்டு 30 வருடம் வாழ்வாய்'. நாய் 15 வருடம் போதுமென வரம் பெற்றுக்கொண்டது.

பின், குரங்கைப் படைத்த கடவுள் அதனிடம், 'நீ குரங்கு. மரக்கிளைகளுக்கிடையில் தாவி வித்தைகள் செய்து வேடிக்கை காட்டி, 20 வருடங்கள் வாழ்வாய்' என்றார். குரங்கும் தனக்கு 10 வருடங்கள் போதுமென வரம் பெற்றது.

கடைசியாக, கடவுள் மனிதனைப் படைத்து, 'நீ மனிதன். இந்த பூமியில் பகுத்தறிவுள்ள ஒரே உயிரினம் நீ தான். உன் அறிவைப் பயன்படுத்தி அனைத்து உயிர்களையும் கட்டுப்படுத்தி, உலகை ஆள்வாய். 20 வருடங்கள் உன் வாழ்க்கை' என்று அவனிடம் சொன்னார். அதற்கு மனிதன், 'ஐயா, 20 வருடங்கள் மிகக்குறுகிய காலம். கழுதை, நாய், மற்றும் குரங்கு வாழவிரும்பாமல் குறைத்துக் கொண்ட (30+15+10) வருடங்களையும் என் வாழ்நாளில் சேர்த்து வழங்குங்கள்' என மன்றாட, கடவுளும் இசைந்து வரம் அளித்தார்.

இதன்படி, மனிதன் முதல் 20 வருடங்கள் மனிதனாக வாழ்கிறான். பின், மணம் முடித்து 30 வருடங்கள் கழுதையாக குடும்பத்துக்கு உழைக்கிறான். குழந்தைகள் வளர்ந்த பின், நாய் போல் கொடுத்தை சாப்பிட்டுக்கொண்டு 15 வருடங்கள் வீட்டை கவனித்துக்கொள்கிறான். வயதான பின், குரங்கைப்போல் ஒரு பிள்ளையின் வீட்டிலிருந்து மற்ற பிள்ளையின் வீட்டுக்கு மாறி மாறிப் போய் பேரக்குழந்தைகளுக்கு வேடிக்கை காண்பிப்பதாய் மனிதனின் வாழ்க்கை அமைகிறதாம்.

இது எப்படி இருக்கு?

Pages

Flickr