
நான் கவிதை எழுத
யோசிக்கும்பொழுதெல்லாம்
பாடாய்ப் படுகிறது நிலா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேய்ந்தாலும் அழகுதான்
வானத்து நிலா
மட்டும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மேகங்களை வெறுக்கிறேன்
நிலவை மறைக்கும்
தருணங்களில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குளத்துநீரில் நிலவு
கலங்கும் நெஞ்சம்
மீன்களே கடித்துவிடாதீர்கள்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நிலவில்லா இரவுகள்...
வானத்தில் மட்டுமல்ல
மனதிலும் வெறுமை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(நன்றி: படங்கள் - இணையத்தளம்)